மனைவியையும், மகளையும் அடித்த நபருக்கு 12 மாத சிறைத் தண்டனை

பாரிட் புந்தார், மார்ச்.12-

கடந்த வாரம் தனது மனைவியையும், மகளையும் அடித்து காயப்படுத்திய குற்றத்திற்காக லோரி ஓட்டுநர் ஒருவருக்கு பேரா, பாரிட் புந்தார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 12 மாத சிறைத் தண்டனை விதித்தது.

முகமட் தேவன் அப்துல்லா என்ற 33 வயதுடய அந்த லோரி ஓட்டுருக்கு எதிரான குற்றச்சாட்டை அவர் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்திரேட் முகமட் ஸைபுஃல் அக்மால் இத்தண்டனையை விதித்தார்.

எட்டுப் பிள்ளைகளுக்குத் தந்தையான தேவன், தனது 41 வயதுடைய மனைவியையும், 10 வயது மகளையும் கண்மூடித்தனமாக அடித்து கன்னம், கழுத்து, மற்றும் நெஞ்சுப் பகுதியில் கடும் காயத்தை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.

கடந்த மார்ச் 8 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் பாரிட் புந்தார், ஜாலான் அப்துல் ராஓவ் என்ற இடத்தில் உள்ள தனது வீட்டில் தேவன் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS