கோலாலம்பூர்,
இன்று பிற்பகலில் பெய்த கனத்த மழையில் கோலாலம்பூர் மஸ்ஜிட் ஜாமெக், எல்ஆர்டி ரயில் நிலையத்தின் ஒரு பகுதி தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது.
எனினும் இச்சம்பவத்தில் உயிருடன் சேதமோ அல்லது ரயில் நிலையத்திற்கு பெரும் பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று எல்ஆர்டி ரயில் சேவையை நிர்வகித்து வரும் Rapid Rail Sdn. Bhd. நிறுவனம் இன்று மாலையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதே வேளையில் இந்த சம்பவத்தினால் ரயில் சேவை பாதிக்கப்படவில்லை என்பதையும் அந்த நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.