குவாந்தான், மார்ச்.16-
பகாங், பெக்கானில் உள்ள கம்போங் செண்டெராவாசியில் அன்னாசி பழத்தோட்டங்களிலும், சதுப்பு நிலக் காடுகளிலும் ஏற்பட்டத் தீ விபத்துக்கு மனிதச் செயல்பாடுகளே காரணம் என்று மலேசிய தீயணைப்பு – மீட்புத் துறையின் ஹலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் முகமட் தெரிவித்துள்ளார். அங்கு சிலரின் ஆரோக்கியமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தத் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. குவாந்தானில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்துகளையும் தீயணைப்புத் துறை குறிப்பிட்டுள்ளது. மேலும், தீ பரவுவதைத் தடுக்க பல்வேறு துறைகளுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், காவல் துறையினர் ரோந்துப் பணிகளை அதிகரிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.