முஸ்லிம்களிடையே மணமுறிவு அதிகரிப்பு

இஸ்கண்டார் புத்ரி, மே.19-

ஜோகூர் மாநிலத்தில் முஸ்லிம் தம்பதியிரிடையே விவகாரத்துச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் பாஃரேட் முகமட் காலிட் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் 6 ஆயிரத்து 844 ஆக இருந்த விவகாரத்து விண்ணப்பங்கள், கடந்த ஆண்டில் 7 ஆயிரத்து 306 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

புரிந்துணர்வின்மை, நிதிப் பிரச்னை, பொறுப்பற்றச் செயல், மூன்றாம் தரப்பு தலையீடு முதலிய காரணங்களினால் ஜோகூர் மாநில முஸ்லிம் தம்பதியிரிடையே விவகாரத்து அதிகரித்து வருவதாக மாநில சட்டமன்றக்கூட்டத்தில் முகமட் பாஃரேட் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS