கோலாலம்பூர், மே.25-
அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர், காலநிலை மாற்றம், விரைவான தொழில்நுட்ப மாற்றங்கள் உள்ளிட்ட தீவிரமடைந்து வரும் உலகளாவிய இடையூறுகளுக்கு மத்தியில், ஆசியான் உடனடியாக சுற்று வட்டார பொருளாதார ஒருங்கிணைப்பையும் கூட்டு பின்னடைவையும் வலுப்படுத்த வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் முகமட் ஹாசான் கூறினார்.
பெரும் ஆற்றல் வாய்ந்த நாடுகளுக்கிடையிலான போட்டி, உலகளாவிய நிலையில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியன சுற்று வட்டார நிலப்பரப்பைச் சீர்குலைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன, ஏனெனில் ஆசியான் நாடுகள் அமெரிக்காவின் வரிகள் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் ஏற்படும் கொந்தளிப்பைச் சமாளிக்க ஒரு கூட்டான அணுகுமுறையை எடுத்துக் கொண்டு, செயலில் ஒரு பங்கை ஏற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “வெளிப்புற அதிர்ச்சிகளிலிருந்து நமது வட்டாரத்தைப் பாதுகாக்க ஆசியான் நிலையிலான பொருளாதார ஒருங்கிணைப்பை நாம் பலப்படுத்த இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றும் அவர் கூறினார்.