கோலாலம்பூர், மே.25-
பிகேஆர் துணைத் தலைவர் போட்டியில் ரஃபிஸி ரம்லியை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றியடைந்த நூருல் இஸா அன்வார், கட்சிக்கு புத்துயிர் ஊட்ட தனது ஆதரவாளர்களையும் ரஃபிஸியின் ஆதரவாளர்களையும் அழைத்துள்ளார். உலகளாவிய நிச்சயமற்றத் தன்மையுடன் போராடி வரும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் நாட்டிற்குத் தலைமை தாங்க கவனம் செலுத்த வேண்டிய நிலையில், கட்சிக்குள் ஒற்றுமையை வளர்ப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
“என்னையும் ரஃபிஸியையும் ஆதரித்த அனைத்து உறுப்பினர்களையும் நான் பிரதிநிதித்துவப்படுத்துகிறேன்” என்று நூருல் இஸா தனது முகநூல் பதிவில் கூறினார். தனது வெற்றி பெருமைக்குரியதல்ல, மாறாக அதிக பொறுப்புணர்வுடன் வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.