நகைக்கடை உரிமையாளர் கடத்தல்

தும்பாட், மே.26-

நகைக்கடை உரிமையாளர் ஒருவர் கடந்த மே 20ஆம் தேதி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கிளந்தான் போலீசார் நால்வரைத் தேடி வருகின்றனர்.

அந்த நான்கு கடத்தல்காரர்களுக்கு எதிராக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கிய போதிலும் அந்த நால்வரும் இன்னமும் நாட்டிற்குள் பதுங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது என்ற கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோப் மாமாட் தெரிவித்தார்.

அந்த நான்கு கடத்தல்காரர்களில் இருவர் அடையாளம் காணப்பட்டு விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS