மலாக்கா, மே.26-
மதுபான விருந்து ஏற்பாடு செய்யப்படுவதற்கு அனுமதி அளித்ததற்காக மலாக்காவில் உள்ள 5 நட்சத்திர அந்தஸ்தைக் கொண்ட இரண்டு ஹோட்டல்களின் ஹாலால் சான்றிதழ் பறிக்கப்பட்டதாக மாநிலக் கல்வி, உயர்க்கல்வி, மற்றும் சமய விவகார ஆட்சிக்குழு உறுப்பினர் ரஹ்மாட் மரிமான் தெரிவித்தார்.
மலாக்கா மாநில சமய விவகார இலாகா, அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் திடீர் சோதனை மேற்கொண்ட போது, மதுபான பயனீடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சமையல் கட்டில், உணவு பரிமாறும் பாத்திரங்களுடன் மதுபானத்திற்கு பயன்படுத்தப்படும் கிளாஸ் வகைகளும் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது, ஹாலால் விதிமுறைகளுக்கு மீறிய செயலாகும். எந்தவொரு கால அவகாசமும் வழங்கப்படாமல் அந்த இரு முன்னணி ஹோட்டல்களின் ஹாலால் சான்றிதழ் உடனடியாகப் பறிக்கப்பட்டதாக அவர் மேலும் விவரித்தார்.