சுபாங், மே.26-
சிக்கனக் கட்டண விமான நிறுவனமான பாத்தேக் ஏர், சுபாங், சுல்தான் அப்துல் அஸிஸ் விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து தலைநகர், பேங்காக்கிற்கு நேரடி விமானச் சேவையை அறிமுகப்படுத்தவிருக்கிறது.
சுபாங்கிலிருந்து, பேங்காக், டின் முவேங் அனைத்துலக விமான நிலையத்திற்கு வரும் ஜுலை 28 ஆம் தேதி முதல் விமானச் சேவை தொடங்குகிறது.
கோலாலம்பூரிலிருந்து பேங்காக்கிற்கு முக்கிய வழித்தடமான இந்த நேரடி விமானச் சேவையை பாத்தேக் ஏர் மேற்கொள்வது மூலம், சுபாங் விமான நிலையம், மீண்டும் பரபரப்புக்குரிய விமான நிலையமாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே தினத்தன்று சுபாங்கிலிருந்து சரவாக் தலைநகர் கூச்சிங்கிற்கும் பாத்தேக் ஏர், விமானச் சேவையை அறிமுகப்படுத்தவிருப்பதாக அந்தச் சிக்கனக் கட்டண விமான நிறுவனம், இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.