கோலாலம்பூர், மே.26-
ஒரு வர்த்தகப் பெண்மணியான டத்தின் ஶ்ரீ பமேலா லிங், கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி மர்மமான முறையில் காணாமல் போனதற்கு, அரசியல் விவகாரம் தொடர்பில்லை என்று கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்துள்ளார்.
புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு வாக்குமூலம் அளிப்பதற்காகச் சென்ற போது காணாமல் போனதாகக் கூறப்படும் 42 வயதுடைய அந்த வர்த்தகப் பெண்மணி தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட புலன் விசாரணையின் அடிப்படையில் இது தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் தலைமையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான ஊடகவியலாளருடனான சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்ட டத்தோ ருஸ்டி செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.