டெல்கோ நிறுவனங்களின் துரிதச் சேவையை அரசாங்கம் உறுதிச் செய்யும்

கோலாலம்பூர், மே.26-

தொடர்புத்துறைத்துறை நிறுவனங்களான டெல்கோவின் சேவைகள், விலை நிர்ணயத் தரநிலைகள் மீதான எம்எஸ்ஏபி வகுத்துள்ள வழியாட்டல் முறைக்கு ஏற்ப விரைவாகவும், மலிவாகவும் வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதிச் செய்யும் என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ பாஃமி பாஃட்சீல் தெரிவித்தார்.

எம்எஸ்ஏபி வழிகாட்டலுக்கு ஏற்ப இந்த வழிமுறையானது, டெல்கோ நிறுவனங்களிடமிருந்து சாமானிய மக்கள் எப்போதுமே நியாயமான விலையில் சேவைகள் பெறுவதை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் உறுதிச் செய்கிறது என்று டத்தோ பாஃமி குறிப்பிட்டார்.

டெலிக்கோம் மலேசியா செயல்படுத்தும் எம்எஸ்ஏபி போன்ற வழிமுறைகள் தங்களிடம் இருப்பதாகக் குறிப்பிட்ட டத்தோ பாஃமி, தொடர்புத்துறை தொடர்பான சேவைகள் எப்போதும் போட்டித்தன்மையுடன் இருப்பது எல்லா நிலைகளிலும் உறுதிச் செய்யப்படும் என்றார்.

WATCH OUR LATEST NEWS