கோலாலம்பூர், மே.26-
தாய்மை அடையும் அனைத்து மலேசியக் கர்ப்பிணிப் பெண்களுக்கும் இன்று முதல் இலவசமாக திடிஏபி தடுப்பூசி செலுத்தப்படும்.
இதற்கு முன்பு செலுத்தப்பட்ட தெரனுஸ் தடுப்பூசிக்கு பதிலாக இன்று முதல் திடிஏபி தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
திடிஏபி தடுப்பூசி என்பது தெதானுஸ், டிபெஃதெரியா மற்றும் பெர்துசிஸ் ஆகியவற்றினால் உருவாக்கப்படும் மூன்று நோய்களுக்கு எதிராக செயல்படும் ஒரு கூட்டுத் தடுப்பூசி ஆகும். இது பெர்துஸிஸை ஏற்படுத்தும் உயிரினங்களின் முழு செல்களைக் கொல்ல வல்லதாகும் என்று சுகாதார அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.