கிள்ளான், மே.27-
கிள்ளான், பண்டமாரான், பூலாவ் இண்டா, தொழில்பேட்டைப் பகுதியில் நிகழ்ந்த மிகப் பெரிய கேபள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் போலீசார் ஐவரைக் கைது செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் அந்நிய நாட்டவர் என தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரம்லி காசா தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில் 46 வயதுடைய நபரிடமிருந்து கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து இந்த கேபள் திருட்டை போலீசாரால் முறியடிக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது தொழிற்சாலைக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமாக சில நபர்கள் சுற்றித் திரிகிறார்கள் என்று அந்த நபர் தந்த தகவலைத் தொடர்ந்து போலீசார் உஷாரானதாக ஏசிபி ரம்லி காசா கூறினார்.
25 க்கும் 44 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐவரும் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.