கோலாலம்பூர், மே.27-
உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலின் வாட்ஸ்அப் ஊடுருவப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாக சைஃபுடினின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆனாமதேய நபர்களால் சைஃபுடினின் வாட்ஸ்அப் ஊடுருவப்பட்டு இருப்பதால், அந்தப் புலனத்தில் வெளியிடப்படக்கூடிய செய்திகளைத் தவிர்க்குமாறு அவரின் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.
குறிப்பாக பணம் அல்லது சந்திப்பு தொடர்பாக வெளியிடப்படக்கூடிய செய்திகளில் மக்கள் மிகுந்த கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.