கோலாலம்பூர், மே.27-
ஆசியான் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றமான ஜிசிசி ஆகியவை பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கு நங்கூரமாகவும், முக்கியக் கேந்திரமாகவும் விளங்குகின்றன என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புகழ்மாலை சூட்டினார்.
கோலாலம்பூரில் நடைபெற்று வரும் 46 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று செவ்வாய்க்கிழமை, ஆசியான் தலைவர்களுடனான விவாதத்தின் போது பேசிய டத்தோஸ்ரீ அன்வார், ஆசியான் கூட்டமைப்பு துடிப்பாகச் செயல்படுவதற்கும், சரியான வழித்தடத்தில் செல்வதற்கும், பதில் அளிக்கக்கூடிய ஒரு பிராந்திய அமைப்பாக விளங்குவதற்கும் இந்த ஒத்துழைப்பு அவசியமாகும் என்றார்.
ஆசியான் மற்றும் ஜிசிசி உறவு, பிராந்தியங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும், மீள்தன்மையை உருவாக்குவதிலும் முக்கியப் பங்காற்ற முடியும் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.