அந்த ஆசிரியை விசாரணை செய்யப்பட்டு வருகிறார்

கோலாலம்பூர், மே.27-

ஆசிரியை ஒருவர், திருமணமான ஓர் ஆணுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து அந்த ஆசிரியை பணியிலிருந்து ஒதுங்கியிருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பாஃட்லீனா சீடேக் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு வழிவிடும் வகையில் அந்த ஆசிரியை தற்போதைக்குக் கடமையாற்ற வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும் விசாரணை முடியும் வரையில் அவர் பொதுச் சேவை ஊழியரே என்று அவர் குறிப்பிட்டார்.

இருவரும் அந்தரங்கத் தொடர்பில் ஈடுபட்டு இருந்த காட்சியைக் கொண்ட காணொளி வைரலானதைத் தொடர்ந்து அந்த ஆசிரியைக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்னதாக இது குறித்து கல்வி அமைச்சு விசாரணை செய்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS