கோலாலம்பூர், மே.27-
இன்று செவ்வாய்க்கிழமை கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் ஜிசிசி-சீனா உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொண்ட புருணை சுல்தான், சுல்தான் ஹாஸ்ஸானால் போல்கியா, ஐஜேஎன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடல் அசதியின் காரணமாக புருணை சுல்தான் ஐஜேஎன்னில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மாநாட்டில் பங்கேற்றுள்ள நாடுகளின் தலைவர்களுக்காக ஆபத்து அவசர வேளைகளில் மருத்துவச் சிகிச்சைக்கு ஐஜேஎன் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.