புருணை சுல்தான் நலமாக உள்ளார்

கோலாலம்பூர், மே.28-

ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்ட போது, உடல் சுகவீனப்பட்ட நிலையில் கோலாலம்பூர் ஐஜேஎன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட புருணை சுல்தான், சுல்தான் ஹாஸ்ஸானால் போல்கியா நலமாக உள்ளார்.

மாநாட்டின் போது, நெஞ்சு வலிக்கு ஆளான புருணை சுல்தான், உடனடியாக தேசிய இருதய சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டார். அவருக்கு உடல் அசதி என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் விளக்கம் அளித்தார்.

ஆனால், புருணை சுல்தானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. அதன் காரணமாகவே அவர் ஐஜேஎன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ராய்ட்டர் வெளியிட்ட தகவல்படி 78 வயதான புருணை சுல்தான் நலமாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS