போர்ட்டிக்சன், மே.28-
போர்ட்டிக்சன், தெலுக் கெமாங் கடற்பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு கடற்கன்னியைப் போல் காத்து வந்ததாக நம்பப்படும் ஓர் ஆமை மடிந்தது, அப்பகுதியில் உள்ள மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
100 கிலோ எடைக் கொண்ட அந்த பெண் ஆமை, கடந்த சனிக்கிழமை காலை 8 மணியளவில் போர்ட்டிக்சன் கடற்பகுதியில், கரை ஒதுங்கிய நிலையில் இறந்து கிடந்தது, பொது மக்களால் கண்டு பிடிக்கப்பட்டு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில மீன்வளத்துறையின் இயக்குநர் காசிம் தாவே தெரிவித்தார்.
அந்த ஆமையின் நடமாட்டத்தை போர்ட்டிக்சன் பகுதியில் உள்ள மீனவர்களும் பல ஆண்டு காலமாகப் பார்த்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர் என்று காசிம் குறிப்பிட்டார்.
எனினும் அந்த ராட்ஷச ஆமை எந்த மாநிலத்திலிருந்து போர்ட்டிக்சன் கடற்பகுதிக்கு வந்துள்ளது என்பதைத் தங்களால் உறுதிப்படுத்த இயலவில்லை என்று அவர் தெரிவித்தார்.