மாஸ்கோ, மே.28-
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், வரும் ஆகஸ்ட் மாதம் ரஷியாவிற்கு அதிகாரத்துவ வருகையை மேற்கொள்ளவிருக்கிறார். பதவியேற்றது முதல் மாமன்னர், ரஷியாவிற்கு பயணம் மேற்கொள்வது இது முதல் முறையாகும் என்று மேலவைத் துணைத் தலைவர் டத்தோ நூர் ஜஸ்லான் முகமட் தெரிவித்தார்.
மாமன்னரின் இந்த அதிகாரத்துவ வருகையின் மூலம் மலேசியாவிற்கும் ரஷியாவிற்கும் இடையிலான உறவு வலுப்பெறும் என்பதுடன் எரிசக்தி, நீர் வளம் ஆகிய துறைகளில் கொண்டுள்ள வியூகமும், அனைத்துலக அளவிலான தொடர்புகளும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.