புத்ராஜெயா, மே.28-
சுமார் 200 கோடி ரிங்கிட் மதிப்புள்ள சொத்து விபரங்களை அறிவிக்க முடியாமல் இருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் காலஞ்சென்ற துன் டாயிம் ஸைனுடின் மற்றும் அவரின் குடும்பத்திற்குச் சொந்தமானச் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் உறுதியாக இருப்பதாக அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
அந்த 200 கோடி ரிங்கிட் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதில் அதிகமானக் குற்றப்பதிவு அறிக்கைகள் தயாரிக்கப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
முறையாக, நேர்மையான வழிகளில் சொத்துக்களைக் குவித்தவர்கள் தங்கள் சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும். ஆனால், இந்த 200 கோடி ரிங்கிட் சொத்து விவகாரத்தில் துன் டாயிம் ஸைனுடினின் குடும்பத்தினால் சொத்து விபங்களுக்குக் கணக்குக் காட்ட முடியவில்லை என அஸாம் பாக்கி விளக்கினார்.