ஆலோங் கும்பலைச் சேர்ந்த மூவருக்கு 12 மாதச் சிறை

கோலாலம்பூர், மே.28-

சட்டவிரோதமாகப் பணத்தை வட்டிக்கு வழங்கி, கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் வீடுகளில் சிவப்புச் சாயம் வீச்சு நடத்தி, அச்சுறுத்தும் ஆலோங் கும்பலைச் சேர்ந்த மூவருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தலா 12 மாதச் சிறைத் தண்டனை விதித்தது.

ஒரு டெக்னிஷனான 34 வயது சின் ஸி பிங், நிறுவன நிர்வாகியான 34 வயது தியூ பூன் சோவ், டெக்னிஷனான 38 வயது ஊய் ஹொங் லியோங் ஆகியோரே சிறைத் தண்டனைக்கு ஆளான நபர்கள் ஆவர்.

மாஜிஸ்திரேட் S. மகேஸ்வரி முன்னிலையில் நிறுத்தப்பட்ட அந்த மூவரும் தங்களுக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டனர். கடந்த மார்ச் 29 ஆம் தேதி அதிகாலை 4.50 மணியளவில் கோலாலம்பூர், பழைய கிள்ளான் சாலை, தாமான் அங்காசா பத்துவில் இந்த மூவரும் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS