பிரதமரைச் சந்தித்ததில் நெகிழ்ந்து போனார் தேவகுமரன் கிருஷ்ணன்

கோலாலம்பூர், மே.28-

கோலாலம்பூரில் ஆசியான் உச்சநிலை மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த நிலையில் ஆசியான் தலைவர் என்ற முறையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறிது நேரம் ஒதுக்கி ஊடகவியலாளர்களைச் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி கொண்டார் ஆர்.டி.எம். செய்தி ஒளிப்பதிவாளர் தேவகுமரன் கிருஷ்ணன்.

ஆசியான் மாநாடு குறித்து தொடர்ந்து செய்தி ஒளிப்பதிவில் ஈடுபட்டு வரும் தம்மை அணுகி, பிரதமர் , ஒளிப்பதிவு விஷயங்களைக் கேட்டது ஓர் இன்ப அதிர்ச்சி மட்டும் அல்ல, வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகும் என்று ஆர்.டி.எம்மில் கடந்த 20 ஆண்டு காலமாக ஒளிப்பதிவு பணியில் ஈடுபட்டு வரும் தேவகுமரன் கிருஷ்ணன் குறிப்பிட்டார்.

பகாங்கில் பிறந்து வளர்ந்தவரான தேவகுமரன் கிருஷ்ணன் அடுத்த வாரத்தில் ஜோகூர் மாநிலத்திற்குப் பணியிடம் மாற்றலாகிச் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS