ஷா ஆலாம், மே.28-
இரு அமைச்சர்கள் ஒரே நேரத்தில் பதவி விலகியதைத் தொடர்ந்து பிகேஆர் கட்சியின் முதலாவது உதவித் தலைவரான டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி, அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று ஆருடம் வலுத்துள்ளது.
பொருளாதார அமைச்சர் பதவிலிருந்து ரஃபிஸி ரம்லி மற்றும் இயற்கை வள அமைச்சர் பதவிலிருந்து நிக் நஸ்மி நிக் அஹ்மாட் பதவி விலகியதைத் தொடந்து கட்சியின் மூத்த உறுப்பினரான அமிருடின் ஷாரி, கூட்டரசு அரசாங்கத்தில் முக்கியப் பதவியை ஏற்கலாம் என்று கூறப்படுகிறது.
அதே வேளையில் இரண்டாவது உதவித் தலைவராக வெற்றிப் பெற்றுள்ள தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் முழு அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இரண்டு அமைச்சர்கள் பதவி விலகலைத் தொடர்ந்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அமைச்சரவை சீரமைப்புச் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.