மாரான், மே.29-
மாரான், கம்போங் பாயா பாசிரில் உள்ள மணல் பம்ப் அருகே உள்ள ஆற்றுப் பகுதியில் நேற்று பிற்பகல் ஆடவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். 58 வயதுடைய அந்த நபர், சுமார் 3 மணியளவில் மீனவர்களால் மிதக்கும் நிலையில் கண்டறியப்பட்டார். பகாங் மாநில தீயணைப்பு – மீட்புப் படைத் துறையின் கூற்றுப்படி, மிதந்து கொண்டிருந்த உடலை மீட்க ஓர் அலுமினியப் படகு பயன்படுத்தப்பட்டது, பின்னர் மேலதிக விசாரணைக்காக அது காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. சேறு நிறைந்த மணல் பகுதி காரணமாக படகை இறக்குவதில் சிரமங்கள் ஏற்பட்டதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர்.