குவாந்தான், மே.29-
மலேசியாவின் கிழக்குக் கரை ரயில் திட்டமான ஈஸ்ட் கோஸ்ட் ரேல் லிங்க் (ECRL) இன், கோத்தாஎஸ்ஏஎஸ் சென்ரல் நிலையத்தின் , கட்டுமான பணிகள் நாளை மே 30 ஆம் தேதி முழுமை பெறவுள்ளது. இந்த முன்னேற்றத் திட்டத்தின், 82.45% பணி முடிவடைந்துள்ள நிலையில், 2027 ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கி இந்த ரயில் சேவை பொதுமக்களுக்கு திறந்து விடப்படவுள்ளது என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
இசிஆர்எல், 665 கிலோமீட்டர் நீளமுடைய இரட்டைப் பாதை ரயில் திட்டமாகும். இது மலேசியாவின் மேற்குக் கரையில் உள்ள போர்ட் கிளேங் நகரத்தையும், கிழக்குக் கரையில் உள்ள கோத்தா பாஹாருவையும் இணைக்கிறது. இந்தத் திட்டம், பகாங், திரங்கானு மற்றும் கிளந்தான் மாநிலங்களை ஒன்றிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.