கோலாலம்பூர், மே.29-
கோடைக்காலப் பள்ளி விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், பள்ளி மாணவர் ஒருவர் ஆசிரியை ஒருவரிடம் தகாத முறையில் பேசிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 17 வினாடிகள் கொண்ட இந்தக் காணொளியில், மாணவர் தான் காதலியைச் சந்திக்கவே பள்ளிக்கு வந்ததாகக் கூறுகிறார். மாணவரின் இத்தகைய பதிலால் ஆசிரியை அதிர்ச்சியடைகிறார். மேலும், இதன் தொடர்ச்சியாக தாம் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டாலும் கவலை இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் பலரிடையே கோபத்தை வரவழைத்துள்ளதுடன், மாணவருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.