சிரம்பான், மே.29-
ஓப்ஸ் காசாக் 2025இன் அமலாக்கம் குறித்து உணவக உரிமையாளர் சங்கங்களுடன் சந்திப்பு நடத்தினார் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ். வீரப்பன். சமையல் எரிவாயுவை மானிய விலையில் இருந்து வணிக ரீதியான பயன்பாட்டிற்கு மாற்றுவதால் ஏற்படும் சவால்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. வணிகங்களுக்கான செயல்பாட்டுச் செலவுகள் அதிகரிப்பது குறித்து மாநில அரசு கவலை கொண்டுள்ளது. சிறு வணிகர்களுக்கு திடீர் சுமை ஏற்படாதவாறு சட்ட அமலாக்கத்தில் சமநிலையான அணுகுமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று வீரப்பன் உறுதியளித்தார்.