ஜாலுர் கெமிலாங் கொடி மிதிக்கப்பட்டது குறித்து ஆராயப்படுகிறது

கோலாலம்பூர், மே.29-

மலேசியத் தொடர்புத்துறை அமைச்சர் பாஃமி பாஃட்சீல், மலேசியக் கொடியான ஜாலுர் கெமிலாங் மிதிக்கப்படும் டிக்டாக் நேரலை வீடியோ குறித்து ஆராய மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையத்திற்குக் கட்டளையிட்டுள்ளார். இலங்கையில் இருந்து ஒளிபரப்பப்பட்ட இந்த வீடியோ, மலேசியா, இலங்கை இணைய மிரட்டல்காரர்களுக்கு இடையிலான இணையப் போரின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்த வீடியோ குறித்து ஆணையம் விசாரித்து வருவதாகவும், நேரலை ஒளிபரப்பிற்கான அணுகலைத் தடுக்க முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ளது. இது ஒரு மனித உரிமை, தேசிய பாதுகாப்பு பிரச்சினை என்று உலகளாவிய மனித உரிமைகள் கூட்டமைப்பான ஜிஎச்ஆர்ஃஎப் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS