தேசிய மருத்துவ நிதி உருவாக்கப்பட வேண்டும்

கோலாலம்பூர், மே.29-

உயர்ந்து வரும் மருத்துவச் செலவுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், பொதுமக்கள் மலிவு விலையில் சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களை வாங்க உதவும் வகையில் தேசிய மருத்துவ நிதியை உருவாக்க வேண்டும் என்று அரசாங்கத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஐஏ இண்டர்நேஷனல் அசிஸ்டன்ஸின் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளின் தலைவர் டாக்டர் அனில் மூர்த்தி இவ்விவகாரம் குறித்து பேசுகையில், சிங்கப்பூரின் தேசியக் காப்பீட்டுத் திட்டமான மெடிஷில்ட் ஹாயாட்டிலிருந்து மலேசியா பாடம் கற்கலாம் என்று கூறினார்.

இஃது ஊழியர் சேம நிதி போன்ற ஒரு தேசியக் காப்பீட்டுத் திட்டம் என்றும், பொது மருத்துவமனைகளிலும் தனியார் துறைகளில் சுகாதாரச் சிகிச்சைகளுக்கும் நிதி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் விளக்கினார். இந்த மாதிரியானது, அனைத்து குடிமக்களுக்கும் நியாயமான விலையில் காப்பீட்டுத் திட்டங்களை அணுகுவதற்கு சம வாய்ப்பை வழங்கும் என்று டாக்டர் அனில் மூர்த்தி வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS