பொதுப்பணி அமைச்சின் பொறுப்பு

புத்ராஜெயா, மே.29-

நெடுஞ்சாலைகளில், கனரக வாகனங்களுக்குத் தனிப் பாதை அமைக்கும் யோசனை பொதுப்பணி அமைச்சின் பொறுப்பு என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார். சாலை வடிவமைப்பு, உள்கட்டமைப்பு தொடர்பான அனைத்து அம்சங்களும் பொதுப்பணி அமைச்சின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என அவர் விளக்கினார்.

போக்குவரத்து அமைச்சு தற்போதுள்ள விதிமுறைகளை அமல்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. அதன்படி, கனரக வாகனங்கள் முந்திச் செல்லும் போது தவிர, எப்பொழுதும் இடது பாதையில் செல்ல வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். இந்தப் புதிய விதி மீறல்களை சாலை போக்குவரத்துத் துறையான ஜேபிஜே தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் என்றார்.

WATCH OUR LATEST NEWS