ஆதாரமற்ற அரசியல் சூழ்ச்சி

கோலாலம்பூர், மே.29-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு அளித்து வந்த ஆதரவை, பல பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீட்டுக் கொண்டதாகப் பரவியுள்ள பட்டியல் தீய நோக்கமுடைய, ஆதாரமற்ற அரசியல் சூழ்ச்சி என்று செகமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுனேஸ்வரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தச் செய்தி போலியானது, அடிப்படையற்றது என்றும், தற்போதைய அரசாங்கத்தின் மீதான நம்பகத்தன்மையைக் குலைக்கும் ஒரு முயற்சி என்றும் அவர் கூறினார்.

அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் சாங் லீ காங் உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வதந்திகளை மறுத்துள்ளனர். இந்த அரசாங்கம் அப்படியே உள்ளது, மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது, மேலும் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உறுதியாக உள்ளது என்று யுனேஸ்வரன் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS