கோலாலம்பூர், மே.29-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், பொருளாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி, இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் ஆகியோர் பதவி விலகியதால் ஏற்பட்ட காலி இடங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்படவில்லை என்று அவர் கூறினார்.
அமைச்சரவையில் மாற்றம் எதுவும் இல்லை எனப் பிரதமர் கூறியதாகவும், போக்குவரத்து அமைச்சர் பதவி தொடரும் என்றும் அந்தோணி லோக் நகைச்சுவையாகத் தெரிவித்தார்.