கோத்தா கினபாலு, மே.30-
சபா, சுரங்க ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது நடவடிக்கைகளுக்கு உத்தரவிடும் ஒரு சர்வாதிகாரியைப் போல் செயல்படும் பிரதமர் தாம் அல்ல என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இன்று சபா, பெனாம்பாங்கில் மாநில அளவிலான காமாதான் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு, உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ அன்வார் இவ்வாறு தெரிவித்தார்.
லஞ்ச ஊழலுக்கு எதிரான பேராட்டங்கள் அனைத்து அளவிலும் முழு அளவில் தொடங்கப்பட வேண்டும் என்பதே தனது அவாவே தவிர விருப்பம் போல் கைது நடவடிக்கை நடைபெற வேண்டும் என்று உத்தரவிடும் ஒரு பிரதமர் அல்ல என்பதையும் அன்வார் விளக்கினார்.