கார், பேருந்துடன் மோதியதில் மூவர் உயிரிழந்தனர்

கோல கெராய், மே.30-

கார் ஒன்று, விரைவு பேருந்தை மோதியதில் அந்த காரில் பயணித்த மூவர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் இன்று காலை 11.20 மணியளவில் கிளந்தான், கோல கெராய், ஜாலான் கிராய் – குவா மூசாங் சாலையில் கம்போங் சுங்கை சாம் என்ற இடத்தில் நிகழ்ந்தது.

பெரோடுவா மைவி காரில் பயணித்த ஓர் ஆடவரும், இரண்டு பெண்களும் இச்சம்பவத்தில் மாண்டதாக கிளந்தான் தீயணைப்பு, மீட்புப்படை இலாகாவின் பேச்சாளர் தெரிவித்தார்.

காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய மூவரின் உடல்களையும் மீட்பதில் தீயணைப்பு, மீட்புப் படையினர் சுமார் 25 நிமிடங்கள் கடுமையாகப் போராடியாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS