மலாக்கா, மே.30-
திருமணமான எலெக்ட்ரிஷனுடன் சல்லாபத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக இடைநிலைப்பள்ளி ஆசிரியைக்கும், அந்த ஆடவருக்கும் மலாக்கா ஷரியா நீதிமன்றம் இன்று தலா 5 ஆயிரம் ரிங்கிட் அபராதத்தை விதித்தது.
கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் வைரலான அந்த ஆசிரியை சம்பந்தப்பட்ட ஒழுங்கீன நடவடிக்கை, கல்வி அமைச்சின் கவனத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டு, விசாரணைக்கு வழிவிடும் வகையில் அந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
31 வயதுடைய இருவரும் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக நீதிபதி யூனோஸ் ஸின், அபராதம் விதிப்பதாக தீர்ப்பில் தெரிவித்தார்.
தனது கணவருடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி, அந்த ஆடவரின் மனைவி, சம்பந்தபட்ட ஆசிரியையை நேரடியாகச் சாடும் காணொளி ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.