கோலாலம்பூர், மே.30-
வரும் ஹஜுப் பெருநாள் விடுமுறையின் போது, வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் நாள் ஒன்றுக்கு சராசரி 20 லட்சம் வாகனங்கள் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிளஸ் மலேசியா பெர்ஹாட் தெரிவித்துள்ளது.
வரும் ஜுன் 5,6,8,9 ஆம் தேதிகளில் வழக்கமான வாகனங்கள் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையைப் பயன்படுத்தவிருக்கின்றன. வாகனமோட்டிகள் வாகன நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்க தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு பிளஸ் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
வாகனமோட்டிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வதற்கு உதவுவதற்கு மைபிளஸ்-டிடிஏ என்ற செயலியைக் கொண்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.