மூவார், மே.30-
மாற்றான் மனைவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக லோங் டைகர் என்பவருக்கு 12 ஆண்டு சிறை மற்றும் 5 பிரம்படித் தண்டனை விதிக்கப்பட்டது.
36 வயதுடைய அப்துல் ஹாமிம் அப்துல் ஹாமிட் என்ற லோங் டைகர், தனக்கு எதிரான குற்றச்சாட்டில் நியாயமான சந்தேகங்களை எழுப்பத் தவறிவிட்டதாக நீதிபதி இர்வான் சுவாய்ன்போன் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
அதே வேளையில் குற்றச்சாட்டை நிரூபிப்பதில் பிராசிகியூஷன் தரப்பு வெற்றி கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதி பிற்பகல் 2.05 மணியளவில் தங்காக், புக்கிட் கம்பீர், தாமான் ஶ்ரீ ஜெயாவில் உள்ள ஒரு வீட்டில் 19 வயது பெண்ணைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக லோங் டைகருக்கு எதிராகக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டப் பெண்ணுக்கு மனதில் ஆறாகக் காயத்தை ஏற்படுத்திய லோங் டைகர் செயல், கடுமையானதாகும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.