பொந்தியான், மே.30-
13 ஆவது மலேசியத் திட்டம் வரும் ஜுலை மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. அதற்கு முன்னதாகவே நாட்டின் புதிய பொருளாதார அமைச்சரை நியமிக்க வேண்டிய அவசியத்தை பொதுப் பணித்துறைத் துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் மஸ்லான் வலியுறுத்தியுள்ளார்.
13 ஆவது மலேசியத் திட்டம், முழுக்க முழுக்க பொருளாதார அமைச்சைச் சார்ந்துள்ளது. எனவே புதிய அமைச்சரை நியமிப்பதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று அஹ்மாட் மஸ்லான் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அதிகமான ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால் அவற்றைத் தாக்கல் செய்வதற்குப் பொருளாதார அமைச்சர் ஒருவர் விரைந்து நியமிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.