கோலாலம்பூர், மே.31-
கிள்ளான் பள்ளத்தாக்கில் நெடுஞ்சாலை நிர்மாணிப்பில் நடந்த நிதி முறைகேடு தொடர்பில் டான்ஸ்ரீ அந்தஸ்தில் உள்ள பிரமுகர் ஒருவருக்குச் சொந்தமான 6 ஆடம்பர பங்களா வீடுகளையும், ஒரு நிலத்தையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் பறிமுதல் செய்துள்ளது.
இவற்றின் மொத்த மதிப்பு ஒரு கோடியே 20 லட்சம் ரிங்கிட்டாகும்.
கோலாலம்பூர் மையப் பகுதியில் உள்ள அந்த டான்ஸ்ரீக்குச் சொந்தமான வீடுகளில் நடந்த அதிரடி சோதனையில் நிதி முறைகேட்டின் வாயிலாக வாங்கப்பட்ட 6 ஆடம்பர பங்களா வீடுகளும் விலை உயர்ந்த குதிரையும் பறிமுதல் செய்யப்பட்டதாக எஸ்பிஆர்எம் தகவல்கள் கூறுகின்றன.
அந்த டான்ஸ்ரீ மற்றும் அவரின் மனைவி சம்பந்தப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விசாரணையில் 30 முதல் 50 சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்று எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்தன.