ஈப்போ, மே.31-
இரண்டு எம்பிவி வாகனங்கள் எதிரும் புதிருமாக மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதர நால்வர் படுகாயம் அடைந்தனர்.
இச்சம்பவம் இன்று காலை 11.45 மணியளவில் பேரா, கேரிக் – குப்பாங் – கேரிக் சாலையின் 1.8 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
நிசான் கிராண்ட் லிவினா ரக எம்பிவி வாகனத்தைச் செலுத்திய 49 வயதுடைய ஆடவர், கடும் காயங்களுக்கு ஆளாகி உயரிழந்ததாக கேரிக் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் பிஃர்டாவுஸ் அப்துல்லா தெரிவித்தார்.
குப்பாங்கிலிருந்து கேரிக் நோக்கி அந்த வாகனத்தில் பயணம் செய்த இதர பயணிகளான 56 வயதுடைய இரு பெண்கள் மற்றும் 21 வயதுடைய ஓர் ஆடவர் கடும் காயங்களுக்கு ஆளாகியதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த நால்வரும் பயணித்த எம்பிவி வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் நுழைந்ததில் மற்றொரு எம்பிவி வாகனத்தினால் மோதப்பட்டதாக பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
அவர்களின் காரை மோதிய பெரோடுவா அல்ஸா எம்பிவி வாகனத்தின் ஓட்டுநர் கடும் காயங்களுக்கு ஆளாகி தைப்பிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.