கோலாலம்பூர், மே.31-
இன்று சனிக்கிழமை சிங்கப்பூரில் நடைபெறும் 22 ஆவது ஷங்ரி-லா கலந்துரையாடலில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டார்.
ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் தற்காப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான இந்தக் கலந்துரையாடலில் பங்கு கொள்வதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், சிங்கப்பூருக்கு ஒரு நாள் அலுவல் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
காலை 11.39 மணியளவில் சிங்கப்பூர், சாங்கி விமான நிலையத்தைச் சென்றடைந்த பிரதமர், பிற்பகல் 2.45 மணியளவில் ஓரேஞ் குரோவ் சாலையில் உள்ள ஷங்ரி-லா ஹோட்டலில் தொடங்கிய சிறப்புக் கலந்துரையாடலில் பங்கு கொண்டுள்ளார்.