அந்த சல்லாப வீடியோ குறித்து போலீஸ் விசாரணை

அலோர் காஜா, மே.31-

திருமணமான மின்னியல் துறைப் பணியாளருக்கும், இடைநிலைப்பள்ளி ஆசிரியைக்கும் இடையிலான சல்லாபக் காட்சிகளைக் கொண்ட வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து அது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாக மலாக்கா, அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் அஷாரி அபு சாமான் தெரிவித்துள்ளார்.

இத்தகைய ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அந்த ஆசிரியைக்கு எதிராக கல்வி அமைச்சு விசாரணை செய்து வருகிறது. கல்வி அமைச்சின் விசாரணைக்கு வழிவிடும் வகையில் அந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த வீடியோ எவ்வாறு சமூக வலைத்தளங்களில் வைரலாகியது என்பது குறித்து 31 வயதுடைய ஆசிரியை போலீஸ் புகார் ஒன்றைச் செய்து இருப்பதாக அஷாரி அபு சாமான் தெரிவித்தார்.

இது தொடர்பாக குற்றவியல் சட்டம் 509 ஆவது பிரிவு மற்றும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் கீழ் விசாரணை அறிக்கை ஒன்று திறக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS