நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி ஆகியோரின் விவாகரத்து அறிவிப்புக்குப் பிறகு இரண்டு தரப்பும் மாறி மாறி அறிக்கைகள் வெளியிட்டு ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசி வருகின்றனர்.
அது பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் நீதிமன்றம் அறிக்கை வெளியிட தற்போது தடை போட்டிருக்கிறது. அதனால் தற்போது இருவரும் அமைதி காத்து வருகின்றனர்.
ரவி மோகன் இதற்கு முன் அளித்த ஒரு பேட்டியில் தான் விரைவில் இயக்குனராக அறிமுகம் ஆகப் போவதாகத் தெரிவித்து இருந்தார்.
அதன்படி அவர் யோகி பாபுவை வைத்து படம் இயக்கப் போவதாகக் கூறப்படுகிறது. அந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் தொடங்கப் போவதாக நடிகர் யோகி பாபு தெரிவித்து இருக்கிறார்.