செப்டம்பர் மாதம் வரை வெப்பமான வானிலை தொடரும்

கோலாலம்பூர், மே.31-

நாட்டில் தற்போது நிலவி வரும் வெப்பமான வானிலை வரும் செப்டம்பர் மாதம் வரை தொடரும் என்று மேட் மலேசியா எனப்படும் மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டைப் பாதிக்கும் வெப்பமான வானிலை அசாதாரண நிகழ்வு அல்ல. மாறாக ஒவ்வோர் ஆண்டும் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் ஏற்படும் ஒரு சாதாரண நிலை. கடந்த மே 10ஆம் தேதி தொடங்கிய இந்த வெப்ப வானிலை செப்டம்பர் நடுப்பகுதி வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS