கோலாலம்பூர், மே.31-
முறையான பயண ஆவணமின்றி மலேசியாவிற்குள் நுழைய முயற்சித்த 105 அந்நிய நாட்டவர்களை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு ஏஜென்சி தடுத்து நிறுத்தி, அவர்களின் தாயகத்திற்கே அனுப்பி வைத்தது.
போலியான டிரான்சிட் பயண டிக்கெட்டைப் பெற்று, அடுத்த விமானத்திற்காகக் காத்திருப்பதைப் போல் அவர்கள் நடித்துள்ளனர்.
விமான நிலையத்திற்குள் சுற்றிக் கொண்டு இருந்த அந்த 105 பேரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமானதைத் தொடர்ந்து அவர்கள் விமான நிலையத்திலேயே பிடிபட்டனர்.
அவர்களிடம் முறையான பயண ஆவணமில்லை என்பதால் நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளனர்.