ஷா ஆலாம், மே.31-
பிகேஆர் தேர்தலில் தனது உதவித் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொண்டுள்ள சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி, தொடர்ந்து மந்திரி பெசார் பதவியில் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று மாநில பக்காத்தான் ஹராப்பான் கேட்டுக் கொண்டுள்ளது.
அமிருடின் ஷாரி, மத்திய அமைச்சராக நியமிக்கப்படலாம் என்று ஆருடங்கள் வலியுறுத்தும் வேளையில் அவர் மாநில மந்திரி பெசாராகத் தொடர்ந்து அப்பொறுப்பில் இருக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் வீற்றிருக்கும் பிகேஆர், டிஏபி மற்றும் அமானா ஆகிய கட்சிகள் கூட்டாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளன.