பேருந்து ஓட்டுநர் படுகாயம், 3 பயணிகள் காயம்

குளுவாங், ஜூன்.01-

மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் பேருந்து ஓட்டுநர் படுகாயத்திற்கு ஆளானார். மேலும் மூன்று பயணிகள் காயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 51.5 ஆவது கிலோமீட்டரில் ஜோகூர் குளுவாங்கிற்கு அருகில் நிகழ்ந்தது.

இரண்டு பேருந்துகள் மற்றும் ஒரு லோரி இந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருந்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்தார்.

விபத்து நிகழும் போது அந்த விரைவு பேருந்தில் 29 பயணிகள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். மற்றொரு பேருந்தில் எட்டுப் பயணிகள் இருந்ததாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS