ஷா ஆலாம், ஜூன்.01-
செனட்டர் தெங்கு ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ், கட்சி விட்டு கட்சித் தாவியிருப்பது தொடர்பில் கட்சித் தாவல் சட்டத்தின் பின் விளைவுகளை அம்னோ ஆராய வேண்டும் என்று அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ஶ்ரீ அஸாலீனா ஒத்மான் சையிட் கேட்டுக் கொண்டார்.
ஒருவர் கட்சி விட்டு கட்சித் தாவினால், அவருக்கு எதிராக எத்தகைய நடவடிக்கை எடுக்க முடியும் என்பதைக் கட்சித் தாவல் தடைச் சட்டம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
எனவே தெங்கு ஸாஃப்ருல் விவகாரத்தில் எத்தகைய நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை அம்னோ சட்டக் குழு ஆராய வேண்டும் என்று சட்டத்துறை அமைச்சரான அஸாலீனா கேட்டுக் கொண்டுள்ளார்.