மடானி அரசாங்கத்தை 10 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆதரிக்கிறார்களா? நிரூபியுங்கள்

கோத்தா பாரு, ஜூன்.01-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மடானி அரசாங்கத்தை எதிர்க்கட்சியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரிப்பதாகக் கூறிக் கொள்ளும் தரப்பினர், அதனை நிரூபிக்க வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனல் இன்று சவால் விடுத்துள்ளது.

எதிர்க்கட்சியைச் சேர்ந்த அந்த 10 எம்.பி.க்கள் நடப்பு அரசாங்கத்தை ஆதரிப்பதாக இருந்தால் அவர்கள் யார் என்பதை அடையாளம் காட்டுவது உட்பட அவர்களின் விவரங்களை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனலின் நாடாளுமன்ற கொறடாவான டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹாசான் கேட்டுக் கொண்டார்.

நடப்பு அரசியல் சூழ்நிலையில் இது போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைப்பது, புதியது அல்ல. அதே வேளையில் அடிப்படை ஆதாராங்களைக் காட்டும் வரையில் இது போன்ற கூற்றுகளை வெறுமனே விட்டு விட முடியாது என்று தக்கியுடின் ஹாசான் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS